Wednesday, March 9, 2016

வாட்ஸ்ஆப்’- சிக்கல்களையும் ஆபத்துக்ளையும் தவிர்ப்பது எப்படி? ..


‘வாட்ஸ்ஆப்’- சிக்கல்களையும் ஆபத்துக்ளையும் தவிர்ப்பது எப்படி?

‘வாட்ஸ்ஆப்’- சிக்கல்களையும் ஆபத்துக்ளையும் தவிர்ப்பது எப்படி?

மூக
வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னை களும் ஆபத்துகளும் அனைவ ரும்
அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக் காக பிரபலமாகி வரும்
‘வாட்ஸ் ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான

பிரச்னைகள் பல. ‘வாட்ஸ் ஆப் என்பது தனிநபர், தன் செல்போனி ல் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… 

இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!

என்னென்ன ஆபத்துகள்?

தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடு க்க
வேண்டும் என்று நினைப்பவர் களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால்
போதும்… அவ ர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கண க்கைப் பார்க்கவும்,
அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன் லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத்
தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி
பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல் போன் எண்ணிலிருந்து தோன்றும்போது,
எதிர்முனையில் இருக்கு ம் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த
முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்பு கொண்டு, உங்களது தகவ ல்களைப் பெற வாய்ப்புள்ள து. தோழிகளால் ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் 
இணைக்கப்படும் போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள் ள  அனைவரிடமும் பகிரப் பட வாய்ப்புள்ளது.

எப்படித் தவிர்க்கலாம்?

பிரச்னைகளைத்
தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரை வஸி செட்டிங் கை
மாற்றியமைக்க வேண்டும். அதாவ து, பிரை வஸி செட்டிங் பகுதிக்குச் சென் று
உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான் டாக்ஸ்
அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களை ப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலா ம்.
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு
செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில்
அதிதீவிர மாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளாக் (Block)
ஆப்ஷனை பயன்படுத்தி, உங்க ளுக்குத் தொல்லை தருபவ ரை உங்கள் கணக்கைத்
தொடராமல் தடுக்கும் வசதி யும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்க ளின்
செல்போன் எண்களை உங்கள் மொபைல்போனில் இருந்து நீக்கிவிட்டா ல்… போயே 
போச்! தெரிந் தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போது மே பாதுகாப்பானது.

ஆபத்துதவி ஆப்ஸ்!

ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதி லிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப் ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில்  பிரபலம டைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பி ரிவான ‘நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்ப ட்ட ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

நீங்கள்
ஏதாவது பிரச்னையில் மாட்டி க்கொண்டால், ‘ஆபத்துதவி’ யாக யார் இருப்பார்களோ
அவருடைய செல்போ ன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரி யை இந்த ஆப்ஸில் பதிவு
செய்ய வே ண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை
விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வே லை செய்ய செய்ய 
ஆரம்பித்துவிடும்.
45 விநாடி கள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு
குறுந்தகவல் மற்றும் மின்னஞ்ச ல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்
ந்துவிடும். ஒரு வேளை நீங்கள் அப்போது இருப் பது இன்டர்நெட் வசதி இல்லாத
இடமாக இருந் தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்து விடும்.

பின்குறிப்பு:

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.zayaninfotech.security

No comments: