‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்
போது
ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ
அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால்
ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை
வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
ஒரு
ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண்
ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப்
பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு
மார்பகங்களுக்கிடையே உள்ள மைய ப்பகுதி அகிய எட்டு இடங்கள் தான் அவை.
கலாஸ்தானம்
இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார்.
இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’
என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித் தான் முத்தமிட்டுக் கொள்கி
றார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில்
எது தப்பு எது சரி என்று சொல் லமாட்டேன். ஒவ் வொருவரும் அவர் வாழும் நாடு,
காலம் சூழ்நிலை, ஆகி யவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ
அப்படி முத்தமிட்டு க்கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.
பிராதி போதக சும்பணம்

ஒவ்வொரு
முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரு ம் காதலனை
பார்த்தவுடன் காதலி தூங்குவதுபோல நடிக்கிறாள். ஆசை யோடு வரும் அவனது எண்ணம்
என்னவாக இருக்கும் என்று அறிந்து கொ ள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன்
இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக் கிறான். இது ‘பிராதி போதக சும்பண ம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கி றார்.
அங்குலி சும்பணம்
இரவு
வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசி க்கின்றது.
வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி,
அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காத
லோடு
காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும்
போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல் களையோ, கால் விரல்களையோ
பிடித்து முத்த மிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.
நிமிதகம்
காதலர்கள்
எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார்கள். ஆனால் அந்த ஆண் மீது
பெண்ணுக்கு முழுநம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு
கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத்தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து
நிற்கிறான். அந்தப்பெண் தன் முகத் தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய்
எந்த உணர்சியும்
இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடு கிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.
சாயா சும்பணம்
காதலனும்
காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில் லை. காதலி
எங்கோ இரவில் பாதுகாப்போ டு வரும்போது சுவரில் விழும் அவளது நிழ லுக்கு
முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’
நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல்
காமசூத்திரம் மட்டுமே. இந்தியர்கள் காலப்போக்கில் முத்தத் தின் நன்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
No comments:
Post a Comment