வடக்கு திசை தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும்
அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
காந்தம்,
உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட் களையும், காந்த தன்மை கொண்ட
பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில்
பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து கொண்டவை களாகும்.
காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு – வட துருவம் (North
Pole)
மற்றும் தென் துருவம் (South Pole). காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள்
ஒன்றை ஒன்று விலகி கொள் ளும் (தள்ளும்)(Like Poles repel each other),
எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (இழுக்கும்) (Unlike poles attract
each other) தன்மை களைக் கொண்டதாகும்.
எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் து
ருவங்களை
ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே
இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை
சிதைந்து விடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets)
தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறுசிறு காந்த துண்டுகளாக மாற்றும்
தன்மை கொண் டது.
பூமி எப்படி காந்தம் ஆனது?
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூ
மியின்
மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான
மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால்
உருவாக்கப் படுகிறது. எனவே மின்னோ ட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும்
வடக்கு திசை, நேர் மின் னோட்டதையும் (Positive Current), இடதுபுறம்
இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Nega tive Current)
பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி
தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.
மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?
மனித
உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை
கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு
அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.
எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு
இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென்
துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின் னோட்டம் வடக்கில் இருந்து
தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கி ற்கும் செல்லும். அதே போல் மனிதனின்
தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம்
தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது,
பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத் துடன் இருக்கும்.
காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால்
உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல்
முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலை கள் செய்து சேர்த்து வைத்த
சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.
No comments:
Post a Comment