ஆதலினால்....
தடுமனில் தவித்தவனிடம்
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!
-
மழைக்கு ஒதுங்க வந்தவள்
உருவாக்கிவிட்டுப் போகிறாள்
ஒரு பெரும் புயலை!
-
விதைகளை பூக்களாக
மாற்றும் இரசவாதத்தை
அவள் மட்டுமே அறிந்திருக்கிறாள்!
-
மௌனங்கள் நிரம்பிய காதலில்
எழுதவும் வேண்டுமா
கடன் வாங்கி ஒரு கவிதையை!
-
பூக்கள் உரசி
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!
-
படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்!
உதடுகளின் போர்க்களம்
எதைக்கொண்டும்
நிரப்பிட இயலுவதில்லை
முத்தம் பதிந்(த்)த சுவடு(க்)களை!
(..)
நெருப்பைத்
தூண்டிடும் முரண்
முத்த ஈரத்தில் மட்டுமே!
(..)
இறைவனும் வெட்கிக் கிறங்கி
இமை மூடுகிறான்
முத்தமிடும் கணங்களில்!
(..)
உமிழ்நீரும் அமுதமாய்
உருமாறும் இரசவாதம்
முத்தங்களில் மட்டுமே!
(..)
நெருப்பையும் குளிரையும்
உயிருக்குள் ஒரு சேர
ஏற்ற வல்லது ஒற்றை முத்தம்
(..)
வெற்றியும் தோல்வியுமில்லா
உதடுகளின் போர்க்களத்தில்
வெல்கிறது முத்தம்!
தழும்புகள்
பிறரின்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
மீண்டெழுந்து வருகிறது
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!
எஞ்சிய வாசனை!
~0~
வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!
மரண வாசனை
’கடைசியா முகம்பாருங்க’
மயானத்தில் தீமூட்டும்முன்
எட்டிப்பார்க்கும் விழிகளில் படிவது
மரணத்தின் கொடூரமுகமே
**
மரணம் எதனினும்
வலிமையானது என்பதை
மரணங்களின் வாயிலாகவே
உணர்த்துகிறது
**
பிறப்பு கல்வி காதல்
கல்யாணம் பணி தொழில்
உறுதியற்ற எதற்கும் நாள் குறிப்பவன்
ஒருபோதும் குறிக்கத்துணிவதில்லை
உறுதியான மரணத்தின் நாளை
**
ஒவ்வொரு மரணமும்
உண்மையாய் உள்வாங்குவோருக்கு
அதுவரை கற்றறியாப் பாடத்திற்கு
பாஸ்மார்க் போட்டுவிட்டுப்போகிறது
**
தன்னைத் தழுவும்வரை
தனக்கு மரணம் வருமென்பதை
யாரும் நம்புவதில்லை
நம்பும் தருணத்தில்
மரணம் விட்டுவைப்பதில்லை
**
செருக்குகள் உதிர்த்து
நெருங்கிய மரணங்களைச்
செரிக்க முடியாமல் நிற்கையில்
கைகளில் பற்றுவதையெல்லாம்
அன்பால் நிரப்பச்செய்வதும் கூட
செரிக்கமுடியாத அதே மரணம்தான்
**
ஒரு உயிரை மட்டும்
கொய்துபோவதா மரணத்தின் பணி
வாழ்க்கைமேல் உடனிருப்போர்
வைத்திருக்கும் நம்பிக்கையைக்
கொஞ்சம் உதிர்க்கச் செய்வதும்தான்
ஒன்னு ரெண்டு மூனு
1.
எல்லாக் காதல் கவிதைகளிலும்
யாரோ ஒருத்தியின் வாசம்
படிந்துதான் கிடக்கிறது
சிலசமயம் அவள் அறிந்து
பலசமயம் அறியாமல்
2.
காத்திருத்தலின்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
காத்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது
3.
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் படைப்புகளிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறதுஎல்லாப் படைப்புகளிலும்
உடையணிவிப்பதோ
உடைகிழிப்பதோ
பூச்சூடி முகப்பூச்சிடுவதோ
சிதைத்துக்காட்டுவதோ
மட்டும்தான் படைப்பாளி
No comments:
Post a Comment